எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்

கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும் அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

களனி வித்யாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற ‘யெலசிய அபிமன்’ நினைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

1875 நவம்பர் 1ஆம் திகதி போதிசத்வ குணோபேத ரத்மலானே ஸ்ரீ தர்மாலோக மகா சுவாமிந்திர தேரினால் நிறுவப்பட்ட பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா, சமகால பௌத்த கல்வியின் தலைமையகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா நிறுவப்பட்டு இந்த ஆண்டு 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நீண்ட வரலாற்றில் வித்யாலங்கார பிரிவேனா நாடு, தேசம், மதம், தர்மம் மற்றும் மொழிக்கு ஆற்றிய சேவை மகத்தானது. சிங்களம், பாலி, சமஸ்கிருதம் மற்றும் பௌத்த தர்மம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பட்டப்படிப்பை நோக்காகக் கொண்டு பிக்குகளுக்குத் தேவையான கல்வியை இந்த நிறுவனம் வழங்கி வந்தது. சமகாலத்திற்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆங்கில மொழி அறிவு என்பனவும் வழங்கப்படுகிறது.

வித்யாலங்கார பிரிவேனாவின் புதிய இணையத்தளத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததோடு ‘யெலசிய அபிமன்’ கல்வித் தொகுப்பு மற்றும் நினைவுத் தொகுப்பு என்பன ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

அமராபுர மகாநிகாயவின் மகாநாயக்க தேரர், அதி வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரர், ராமான்ய மகாநிகாய மகாநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய மகுலேவே விமல தேரர், அமெரிக்காவின் வொஷிங்டன் மேரிலாந்து விகாரையின் விகாராதிபதி அதி வணக்கத்திற்குரிய கட்டுகஸ்தொட்ட உபரதன நாயக்க தேரர், பிரபல நடிகர் ரவீந்திர ரந்தேனிய, ஓய்வுபெற்ற சிரேஸ்ட பேராசிரியர் தர்ஷன ரத்நாயக்க ஆகியோருக்கும் கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

வித்யாலங்கார இறுதிப் பரீட்சையின் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

இந்த வித்யாலங்கார பிரிவேனாவை நமது நாட்டில் நவீன கல்வியின் மையம் என்று அழைக்கலாம். வித்யாலங்கார பிரிவேனா கல்வித் துறையில் பெரும் பங்காற்றியது. இந்த வழிபாட்டுத் தலம் மிகப்பெரிய சமூகப் பணிகளைச் செய்த பிக்குமார்களால் வளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வித்யாலங்கார பிரிவேனா கல்வித்துறையில் மட்டுமல்ல, நமது கிராமங்களுக்குத் தேவையான ஒழுக்கமான பிக்குகளை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றியது. இது நமது கிராமங்களில் பிரிவேனா கல்விக்கான ஆசிரியர்களை உருவாக்கும் மையமாகவும் மாறியது. பௌத்த தத்துவ அடித்தளங்களை ஆராய்வதன் மூலம் சரியானதைக் கண்டறிய பாடுபடும் ஒரு மையம் இது.

வித்யாலங்கார பிரிவேனா என்பது உள்நாட்டு மட்டுமல்ல, வெளிநாட்டு மாணவர்களும் படிக்கும் ஒரு சிறந்த கல்வி மையமாகும். 1940களில், அக்கால ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக பிக்குகள் செயல்படத் தொடங்கினர். இதனால் கோபமடைந்த குழுக்கள் பிக்குகளுக்கு எதிராக ஒரு புதிய வகை அரசியல் பிக்குகளாக புதிதாக பிக்குகளை உருவாக்கினர். புத்தர் போதித்த தர்மத்தைப் பின்பற்றும் பிக்குகளின் தலைமுறை ஒன்றும், மறுபுறம், கேலிக்கூத்தான அரசியல் பிக்குகளின் தலைமுறை என்று கூறப்படும் ஒரு புதிய வகையை உருவாக்கினர். இந்த நாட்டில் பிக்கு தலைமுறை நமது சமூகத்துடன் பிணைப்பைக் கொண்டுள்ளது. அவர்களின் சமூக செயல்பாடு ஆட்சியாளர்களின் சமூக விரோதக் கொள்கைகளுக்கு எதிராக இருந்தது. 1946 மார்ச் 14 ஆம் திகதி வித்யாலங்கார பிரிவேனா பிரகடனம் என்ற பெயரில் பிக்குகளும் அரசியலும் என்ற வரலாற்று ஆவணம் வெளியிடப்பட்டது. இந்த பிரகடனத்தின் மூலம் பிக்குகளின் சமூகப் பணிகளில் மிக முக்கியமான திருப்புமுனை வெளியிடப்பட்டது.

ஒரு ஆட்சி வீழ்ச்சியடைந்தால், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அதற்கு இணையாக பௌத்த மதத்தின் மீதான தாக்கமும் தவிர்க்க முடியாதது என்பது அந்த அறிக்கை தெளிவாகச் சுட்டிகாட்டப்ட்டிருந்தது. எனவே, பிக்குகளின் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஏதாவது திட்டம் இருந்தால், அதில் அரசியலோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அதில் ஈடுபடுவது பிக்குவுக்கு உகந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது நமது பிக்குகளுக்கு நல்ல வழிகாட்டுதலை வழங்குகிறது என்று நான் நினைக்கிறேன்.பிக்குகளை மையமாகக் கொண்டு பரப்பப்பட்ட அவதூறுகள் இந்த அறிக்கையில் பலமான முறையில் தகர்க்கப்பட்டது. இந்த கருத்தாடல் இலவச கல்விச் சட்டத்துடன் தான் அன்று கட்டமைக்கப்பட்டது. இலவச கல்விச் சட்டம் தொடர்பாக வித்யாலங்கார பிரிவேனாவை மையமாகக் கொண்ட பெரும் எழுச்சி மிகவும் வலுவான வெற்றிக்கு வழிவகுத்தது.

1947 இல் ‘காலய’ இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டது போன்று வித்யாலங்கார பிரிவேனா பிக்குகள் மற்றும் சமூகத்திற்கு நல்ல விடயங்களைக் கொண்டுவரும் ஒரு பாரிய மையமாக மாறியுள்ளது. 150 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட வரலாறாகும்.

இந்த மாபெரும் வித்யாலங்கார பிரிவேனா 150 ஆண்டுகளாக மிகவும் வலிமையானது மற்றும் நமது பௌத்த தர்மம், சமூகம் மற்றும் பிக்கு சமூகத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. அந்த வரலாற்றுப் பொறுப்பு தற்போதைய பரிவேனாதிபதி தேரர் மற்றும் எங்கள் பிக்குகளின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. அவரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பணியை அவர் மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் வலுவான எதிர்பார்ப்பும் எங்களுக்கு உள்ளது.

2005 இல் தொடங்கிய இந்தப் பிரிவேனாவின் நிர்மாணப் பணிகள் 20 ஆண்டுகளாக நிறைவு செய்யப்படவில்லை. மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் அறிவு கொண்ட ஒரு நாட்டில் ஒரு கட்டிடத்தைக் கட்டித் திறக்க 20 ஆண்டுகள் ஆகும் என்றால், நாம் எந்தளவு கீழ் மட்டத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம். 2005 இல் செலவிடப்பட்ட பணத்தின் பயன்கள் 2025 தான் கிடைக்கிறது என்றால் பொதுமக்களின் பணத்திற்கு நாம் நியாயத்தை நிலைநாட்டவில்லை. அரச பொறிமுறையில் உள்ள திறமையின்மை, குழப்பகரமான தன்மை என்பவற்றை ஒவ்வொன்றாக தீர்க்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

இந்தக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை அமைச்சர் ஹினிதும சுனில் அமைச்சரவையில் சமர்ப்பித்தார். ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது மின்சார இணைப்பு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.கம்பிகள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.இந்தளவு புனிதமான இடத்தில் உள்ள கம்பியை பாதுகாக்க முடியாவிட்டால், நாடு எங்குள்ளது?

போதைப்பொருள்தான் இதற்கு முக்கிய காரணம். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ளள கம்பியைப் பாதுகாக்க அதிரடிப்படை நிறுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள யானைகள் வேலியில் வைக்கப்பட்டுள்ள பெட்டரியை திருடப்படுகிறது. எனவே, இந்தக் கட்டிடத்தில் உள்ள பாரிய கம்பி வெட்டப்பட்டதன் பின்னணியில் உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒரு அரசாங்கமாக, நமக்கு ஒதுங்க முடியாத பொறுப்பு உள்ளது.

இந்த போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். இந்த போதைப் பொருட்கள் நாம் நினைத்துப் பார்க்காது துறைகளுக்கும் பரவியுள்ளன. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக அரசியல் மற்றும் வாதங்கள் இருக்கலாம். ஆனால் இந்த பேரழிவைத் தடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும். கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை தகர்க்க முடியாது. நாம் தவறு செய்தால், கிராமத்தில் உள்ள விகாரையின் பிக்குவைத்தான் குறை கூறுவோம். கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக உறவும் வரலாற்று பாரம்பரியமும் உள்ளது. இந்த சமூகத்திற்கு மீண்டும் பிக்குவின் மரபு தேவை. இந்த நாட்டிற்கு ஏற்பட்ட ஒவ்வொரு பேரழிவிலும், பிக்குகள் முன்வந்து செயற்பட்டுள்ளனர்.

நாட்டுக்கும் மக்களின் நலனுக்காக அவர்கள் எவ்வளவு பணியாற்றியுள்ளனர்? நமது நாட்டை மீட்டெடுக்க அத்தகைய பிக்குமார்களின் தலையீடு அவசியம். அந்தத் தலையீட்டைச் செய்ய நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர், வணக்கத்துக்குரிய கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் இத்தேபானே தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் , அனுநாயக்க தேரர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல்வாதிகள், தூதுவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles