என் உரையாடல்களை ஒட்டுக்கேட்ட சி.ஐ.டியினரை விசாரிக்க வேண்டும்! – நாடாளுமன்றில் சம்பிக்க கோரிக்கை

இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் போன்ற தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் உபகரணங்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வைத்திருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்னையை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த சம்பிக்க ரணவக்க, மேலும் கூறுகையில்,

“செப்டெம்பர் 21 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் என்னை விசாரணையொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி நான் அங்கு சென்றேன். என்னிடம் விசாரணையின் போது, அதிகாரியொருவர் எனது தொலைபேசி உரையாடல் குறித்தும் கூறினார். அதாவது 2018, 2019 இல் எனது தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டுள்ளதாக எனக்குத் தெரியவந்தது. அவ்வாறு தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்பதற்கு நீதவானின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதா? எனக் கேட்டேன். ஆனால், அவ்வாறு அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை.

இதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் எனது தனிமைப்பட்ட உரிமை மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியுள்ளனர். இதில் கருத்துச் சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. இதனால் அந்த அதிகாரிகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்கின்றோம்.

இதேவேளை, வட்ஸ்அப் மூலமான உரையாடல்களே இவ்வாறு ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. ஆனால், வட்ஸ்அப் செயலியில் அவ்வாறு ஒட்டுக் கேட்பதற்கான அம்சங்கள் கிடையாது. அப்படியென்றால் ஏதேனும் விசேட தொழில்நுட்பம் ஊடாக மட்டுமே அதனைச் செய்ய முடியும்.

கடந்த காலங்களில் உலகில் பிரான்ஸ் ஜனாதிபதி, இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பிரபலங்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. பெகாசஸ் என்ற பெயரில் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட அந்தத் தொழில்நுட்ப உபகரணம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் இருக்கின்றதா? அவ்வாறு இல்லாவிட்டால் சாதாரண வட்ஸ்அப் தொடர்பாடல்கள் தொடர்பான தகவல்களை எப்படி பெற்றார்கள் என்று விசாரணை நடத்த வேண்டும்” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles