எல்லைதாண்டிய 21 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்தே இலங்கை கடற்படையினரால் இந்த 21 பேரும் கைதாகியுள்ளனர்.

தொடர்ந்து, கைதான மீனவர்கள் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

நீரியல் வள திணைக்களத்தினர் கைதான மீனவர்கள் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles