இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடித்த 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஐந்து விசைப்படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழக மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மொத்தமாக தமிழக மீனவர்கள் 32 பேர் 5 படகுடன் சிறைபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மன்னார் மற்றும் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளனர்.
