‘ஐவரின் உயிரை பலியெடுத்த ராகலை தீ விபத்து’ – கைதான சந்தேக நபருக்கு மறியல் நீடிப்பு!

ஐந்து உயிர்களை காவு கொண்ட ராகலை மத்திய பிரிவு தோட்ட கோர சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணை வலப்பனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.ஆர்.எஸ்.ஜினதாச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

 

ராகலை காேர சம்பவத்தில் உயிர் தப்பியிருந்த தங்கையா இரவீந்திரன் வயது (27) என்பவரை இராகலை பொலிசார் இம்மாதம் 12.10.2021ஆம் திகதி அன்று கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட தங்கையா இரவீந்திரனை அன்றைய தினம் மாலை வலப்பனை பிரதேச மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இராகலை பொலிசார் ஆஜர்படுத்தியிருந்தனர். இதனையடுத்து இவ்வழக்கு விசாரணைகள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேக நபர் தரப்பில் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை .ஆனால் சந்தேக நபர் தொடர்பாக இராகலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஆஜராகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் வழக்கை விசாரித்த நீதவான் டி.ஆர்.எஸ்.ஜினதாச சம்பவம் தொடர்பில் இரசாயன பரிசோதனை அறிக்கை,மரண விசாரணை அறிக்கை,பிரேத பரிசோதணை அறிக்கை
உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் அடுத்த வழக்கில் சமர்பிக்க பொலிசாருக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

அதேநேரத்தில் இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் (08.11.2021) திங்கட் கிழமை வரை வழக்கு ஒத்தி வைப்பதாகவும் அதுவரை சந்தேக நபரை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles