ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி தலைமைப்பதவிக்கு நால்வரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் செயற்குழு மற்றும் சம்மேளனம்கூடி புதிய தலைவரை தெரிவுசெய்யும். பெரும்பாலும் இரகசிய வாக்கெடுப்புமூலமே தேர்வு நடக்கும்.
நாளை மறுதினமும் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.










