‘ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அழைக்க வேண்டும்’

இலங்கைக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையார் மிச்செல் பசெலெட் அம்மையாருக்கு அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், அனைத்துலக அரசியல் விமர்சகருமான கலாநிதி கலாநிதி பிரதீபா மஹாநாம ஹோவா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கைக்கு 2014 ஆம் ஆண்டிலும் இதேபோன்றதொரு நிலைதான் ஏற்பட்டிருந்தது. அப்போது மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த பேராசிரியர் நவநீதம் பிள்ளை அம்மையாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்று அவர் நாட்டுக்கு வந்தார். அனைத்து பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். குறைகளையும் பட்டியலிட்டுக்காட்டினார். ஆனாலும் அவர் யதார்த்தத்தை புரிந்துகொண்டார். இளைஞர் நாடாளுமன்றம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இலங்கை வருவதற்கு முன்னர் அந்நாடு தொடர்பில் இருந்த மனநிலை விஜயத்தின் பின்னர் மாறியதாக நவநீதம் பிள்ளை அம்மையார் குறிப்பிட்டிருந்தார். யாழ். பயணத்தின்போது மொழி உரிமைக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை உணர்ந்தார்.

எனவே, இலங்கை வருமாறு தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அழைப்பு விடுக்கவேண்டும். அதனை பிற நாடுகள் சாதகமான விடயமாக பார்க்கக்கூடும். அறிக்கைகளை மட்டும் அடிப்படையாகக்கொண்டே இலங்கை தொடர்பில் அவர் விம்பமொன்றை உருவாக்கி வைத்திருப்பார். ஆகவே, இலங்கைக்கு நேரில் வந்து, பல தரப்புகளுடன் கலந்துரையாடி நிலைமையை கண்காணித்தால் அவரால் யதார்த்த நிலைமையை புரிந்துகொள்ள முடியும். தவறான விம்பமும் உடையக்கூடும்.

அறிக்கையாளர்கள் வருவதைக்காட்டிலும் மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்தால்தான், இலங்கை என்ன செய்துள்ளது, எவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதனை நேரில் அவதானிக்க முடியும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles