2021 ஜனவரி முதல் மே மாதம் 30 ஆம் திகதிவரை நாட்டில் 7 ஆயிரத்து 674 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மாத்திரம் 766 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் எதிர்காலத்தில் டெங்கு நோய் வேகமாக பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, பொதுமுடக்கம் அமுலில் உள்ள இக்காலப்பகுதியில் வீட்டையும், வீட்டு சுழலையும் டெங்கு நோய் பரவாத விதத்தில் சுத்தமாக வைத்து, டெங்குவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கர்ப்பிணி பெண்கள், ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தைகள், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடன் வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
