கஞ்சாவுடன் பொகவந்தலாவையில் இருவர் கைது!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ பிரதான பாலத்திற்கு அருகாமையில் வைத்து கஞ்சா போதை பொருளுடன் இருவர், இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வசம் 5 கிலோ 600 கிராம் கஞ்சா போதை பொருள் இருந்ததாகவும் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பொகவந்தலாவ பாரதி புறத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கெளசல்யா

Related Articles

Latest Articles