கண்டியில் நேற்று மாத்திரம் 40 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை கண்டி மாவட்டத்தில் ஆயிரத்து 434 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 15 பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை 314 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 மாத்தளை மாவட்டத்தில் 100 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles