கண்டி, நுவரெலியாவில் தொடரும் கொரோனா விழிப்புணர்வுத் திட்டம் : பாரத் அருள்சாமி

நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் நாளை திங்கட் கிழமை முதல் மேலும் பல கொரோனா விழிப்புணர்வு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக மலையகத்தின் கொவிட் 19 பாதுகாப்பு செயலணியின் பிரதானி பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்ட பகுதிகளில் கொவிட் 19 தொற்று அதிகரிக்கலாம் என சுகாதார அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ள நிலையில் இந்தத் திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

கொவிட் பரவல் நாளாந்தம் அதிகரிக்கும் நிலையில் மலையக பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் கட்டாயம் உரிய சுகாதார வழிக்காட்டல்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டியது பெருந்தோட்ட மக்களின் கட்டாய கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாறாக சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்ற தவறினால் நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்கள் பாரிய அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே, மலையக மக்கள் சுகாதார பணியாளர்களின் சேவைகளை உதாசீனப்படுத்தாமல் கைகளை கழுவி, முகக் கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை பேணி தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் சந்தர்பத்தில் பிரஜாசக்தி நிறுவனம் முன்னின்று செயற்படும் எனவும் முக்கியமாக எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதார பிரிவ மற்றும் பாதுகாப்பு படையுடன் இணைந்து மிக துரிதமாக முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெருந்தோட்ட மக்கள் நகர்புறங்களுக்கு வருவதை தடுப்பது குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதாவது அத்தியாவசிய பொருட்களை பெருந்தோட்ட பகுதிகளுக்கே கொண்டு சென்று வழங்குவது குறித்த திட்டம் எனவும் பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்துள்ளார்.

ஆகவே சகல கட்சி இன மத பேதங்களையும் மறந்து இலங்கையர்களாக இணைந்து கொவிட் பெருந்தொற்றை இல்லாதொழிக்க ஒத்துழைப்பு வழங்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் எனவும் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles