‘கந்தக்காடு கொத்தனி பரவலும் கட்டுக்குள் வருகிறது’

நாட்டில் நேற்று (21) கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று முன்தினம்வரை 2 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இவர்களில் 2 ஆயிரத்து 48 பேர் குணமடைந்துள்ளனர். 671 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் சமுக பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் வெலிசர கடற்படை முகாம் விவகாரம் கொத்தணி பரவலை ஏற்படுத்தியது. தற்போது வைரஸ் தொற்றுக்கு இலக்கான அனைத்து படையினரும் குணமடைந்துள்ளனர்.

அதன்பின்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் பரவல், மீண்டும் கொத்தணி தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவும் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது என நம்பப்படுகின்றது.

எதுஎப்படியோ தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பாகும்.

Related Articles

Latest Articles