கலஹா 18 ஆம் கட்டை பகுதியிலுள்ள தென்னை மரமொன்றில் அதிகளவு இளநீர் காய்ப்பதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அண்மையில் ஒரு இளநீர் கொப்பில் 50 காய்கள் காய்ந்துள்ளன. அதுமட்டுமல்ல தொடர்ச்சியாக அதிகளவு பயன் கிடைப்பதாக அதன் உரிமையாளர் ராஜலிங்கம் தம்பிராஜா தெரிவித்தார்.
தான் 50 ரூபாவுக்கே இக்கன்றை வாங்கி நற்றதாகவும், அதன்மூலம் 6 வருடங்களுக்கு மேல் உச்ச பயன் கிடைத்துவருவதாகவும் அவர் கூறினார்.
கலஹா நிருபர் ரம்யா