கலைப் போராளிக்கு கிடைத்த அங்கீகாரம்!

கலைப் போராளிக்கு கிடைத்த அங்கீகாரம்!

மலையக நட்சத்திரக் கலைப்பேரவையின் தலைவர் கலைஞர் மலையக வாசுதேவன், கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் கலை மற்றும் இலக்கியத்துறைக்கு பெரும் பங்காறிய கலைஞர்களுக்கும், இலக்கிய ஆளுமைகளுக்கும் கலாபூஷணம் அரச விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதன்போதே கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்கு உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மலையக தமிழர்களின் கலை, கலாசார , பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதற்காக களமாடிய கலைப் போராளியே மலையக வாசுதேவன் ஆவார்.

புரட்டொப், மேமலை தோட்டத்தை சேர்ந்த இவர், புதிய கலைஞர்களை உருவாக்குவதிலும் தம்மால் முடிந்த அனைத்து பங்களிப்பையும் வழங்கி வருகின்றார்.

வாழ்த்துகள் ஐயா
www.kuruvi.lk

Related Articles

Latest Articles