காட்டு யானை தாக்கி கடற்படை சிப்பாய் பலி!

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க (வயது – 41) என்ற கடற்படைச் சிப்பாயே உயிரிழந்துள்ளார் என்று சிலாபத்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சிலாபத்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Articles

Latest Articles