பாகிஸ்தானின் பெஷாவர்(Peshawar) நகரிலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 32பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன், 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த குண்டு வெடிப்பில் மசூதியின் ஒரு பகுதி தகர்ந்துள்ளது. குண்டுவெடிப்பிற்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.










