லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளகா கொலனியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
தனது மரக்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவேளையிலேயே அவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையான ராமச்சந்திரன் பத்மநாதன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கௌசல்யா
