கூட்டணியின் பங்காளியொருவர் விரைவில் ‘பல்டி’!

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சியொன்றின் பிரமுகர் ஒருவர் விரைவில் கட்சி தாவவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணியில் நிதி விவகாரத்துக்கு பொறுப்பாக இருக்கும் அரசியல்வாதியொருவரே இவ்வாறு கட்சிமாறவுள்ளார் எனவும், இதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாகவும் அறியமுடிகின்றது.

நிதி அறிக்கையை சமர்ப்பிக்காமல் நீண்டகாலமாக இழுத்தடிப்புசெய்துவரும் குறித்த அரசியல்வாதிக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் சிலர் தலைமைப்பீடத்திடம் முறையிட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் அவரை கட்சியைவிட்டு நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

Related Articles

Latest Articles