கூட்டமைப்பின் போராட்டத்தை நாடகமென்கிறது அரசு

” பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம். அதனால்தான் பிரதமர் சந்திப்புக்கு வாய்ப்பு வழங்கியும் அதனை பயன்படுத்தவில்லை. சர்வதேசத்துக்காகவே கூட்டமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்.” – என்று இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று சபைக்குள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றிருந்ததாகவும், அவர்களை சந்திக்க குறைந்தபட்சம் அதிகாரி ஒருவர்கூட வரவில்லையெனவும் சுட்டிக்காட்டி இருந்தனர். இது தொடர்பில் ஜனாதிபதி செலயகத்திடம் நான் வினவினேன். ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக விசேட செயலாளர் ஒருவரும், பணியாள் குழுவினருக்கும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்குச்சென்றுள்ளனர்.

அவ்வேளை, ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கோரியுள்ளனர். இன்றைய தினம் ஜனாதிபதி வேறு வேலைகளில் இருப்பதால், சந்திப்பு முடியாதென அறிவிக்கப்பட்டுளளது. அத்துடன், பிரதமரை உடன் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு எம்.பிக்களுடன் அலரிமாளிகையில் பேச்சு நடத்துவதற்கு பிரதமரும் சந்திப்புக்கு தயாராகவே இருந்துள்ளார். அதனை இவர்கள் நிராகரித்துள்ளனர். பிரதமரை வீதிக்கு அழைத்துள்ளனர்.

எனவே, கூட்டமைப்பினர் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். சந்திப்புக்கு நேரம் வழங்கியும் அதனை பயன்படுத்தவில்லை. இதன்மூலம் அவர்களின் நோக்கம் என்னவென்பது தெளிவாகின்றது. பிரச்சினைக்கு தீர்வைத் தேடுவது அவர்களின் நோக்கம் அல்ல. சர்வதேச கவனத்தை ஈர்க்கவே இப்படியான செயலில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி சந்திப்புக்கு நேரம் வழங்குவார். எனவே, அங்கு சென்று பேச்சு நடத்துங்கள். ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles