முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 914 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்பேரில் நாளொன்றில் கைது செய்யப்பட்ட அதிகளவானவர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
அதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று காலை 6 மணிவரை அச்சட்டத்தைமீறிய 17 ஆயிரத்து 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
