மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டத்தில் எமில்டன் பிரிவில் தொழில் புரிந்த தோட்டத் தொழிலாளர்களில் இருவர் இன்று முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
30 வயதுடைய விஸ்வநாதன், 36 வயதுடைய பிரபு ஆகியோரே குளவிக்கொட்டால் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமுதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இருவம் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பபட்டனர் என்று மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி டிலக்ஷி தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்










