கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த சச்சின் மருத்துவ ஆலோசனையின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில்

” உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி. மருத்துவ ஆலோசனையின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். கவனமாக இருங்கள் மற்றும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

நமது உலகக் கோப்பை 10 வது ஆண்டு நிறைவையொட்டி அனைத்து இந்தியர்களுக்கும் எனது அணியினருக்கும் வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.” – என்றனர்.

Related Articles

Latest Articles