கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 06, அரநாயக்க மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை இன்று மாத்திரம் 660 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles