2ஆம் இணைப்பு
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டில் கைதான இருவரும் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தே, 10 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
…….
அழகுக்கலை நிபுணரான சந்திக ஜயசிங்கவும், நடிகை பியூமி ஹன்சமாலியும் கொழும்பு, கோட்டை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் பிறந்தநாள் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் கடும் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளது. அனைத்துவிதமான களியாட்ட நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
