கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (14) 161 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
83 ஆண்களும், 78 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.










