கொழும்பின் பல பகுதிகளில் இன்று (11) 18 மணி நேரம் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (11) நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
அம்பத்தளையில் இருந்து கொழும்பு வரையிலான நீர்க்குழாயின் பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.










