கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 266 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 267 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று இரண்டு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் ஆயிரத்து 185 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 99 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.