அத்தியாவசிய சேவைகளுக்காக கொழும்பு நகருக்கும் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பமானது.
ஒரு வாகனம் பல இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஸ்டிக்கரின் பாவனைக்காலம் ஒரு நாளாகும்.
அதன்படி நாளை காலையும் ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறை முன்னெடுக்கப்படும்.
ஒரு இடத்தின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டாலும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவ்வாகனம் மற்றுமொரு இடத்திலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
