நத்தார் பண்டிகையை முன்னிட்டு எட்டு விசேட ரயில்களை நாளை முதல் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கோட்டை வரையும் 03 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
அத்துடன், கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
