கோடிக் கணக்கில் செலவு செய்து கட்டிய தனிவீடுகள் காட்டுக்கு இரையாகும் அவல நிலை

கே.சுந்தரலிங்கம்

கொட்டகலை ஸ்டோனிகிளிப் பகுதியில் பல கோடி ரூபாய்களை செலவு செய்து கட்டடிய தனி வீடுகள் கடந்த ஒரு வருடகாலமாக காட்டுக்கு இரையாகும.; அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த தனி வீடுகள் ஏழு பேச்சஸ் காணியில் ஒரு வீட்டுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பணம் செலவு செய்து சுமார் 25 வீடுகள் மின்சாரம்,தண்ணீர் பாதை உட்பட அடிப்படை வசதிகளுடன் கடந்த அரசாங்கத்தினால் டிரஸ்ட்; (மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் ) ஊடாக கட்டப்பட்டதாகவும் எனினும் குறித்த வீடுகள் இதுவரை எவருக்கும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த 25 வீடுகள் பராமறிப்பின்றி ஒருவருட காலமாக பாழடைந்து போய் உள்ளன. தற்போது காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன.

தொடர்ந்தும் இந்த வீடுகள் எவருக்கும் வழங்காது தாமதிக்கப்படுமானால் இவற்றினை மீண்டும் புனரமைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் இதனால் மீண்டும் பொது மக்களின் பணமே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தற்காலிக கொட்டடில்களிலும் பழைமைவாய்ந்த மிகவும் ஆபத்தான தொடர்குடியிருப்புக்களிலும்; வாழும் நிலையில் பொது மக்களின் வரிப்பணத்தில் இன்று இவ்வாறு சகல வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய வீடுகள் எவருக்கும் பயன்படாதிருப்பது மிகவும் வேதனைக்குரியது என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில் புதிதாக கட்டிய தனி வீடுகள் வீண் போக விடாது பொறுப்பு வாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுத்து வீடுகள் இல்லாது அவதிப்படுவர்களுக்கு உரிய வீடுகளை பெற்றுக் கொடுக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles