முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் பெப்ரவரி 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக சீனாவிற்கு புறப்பட்டனர்.
விமான நிலைய ஆதாரங்களின்படி, தம்பதியினர் முதலில் சீனாவுக்குச் செல்வதற்கு முன்பு மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்றனர். அவர்கள் மதியம் 12:25 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH-178 இல் ஏறினர்.
மேலும், அவர்கள் தங்கள் விமானத்தை அணுக விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.