சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டத்திட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமை திருத்தம் தொர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நாளை முற்பகல் 10மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles