ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அரசுடன் இணைவார்கள் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.
” ஜனாதிபதி செயலக வளாகத்தில் இருந்துதான் போராட்டக்காரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கோல்பேஸ் போராட்டக்களம் அகற்றப்படவில்லை. போராட்டக்காரர்களின் இலக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றே நான் கருதுகின்றேன்.
இது தற்காலிக அமைச்சரவைதான். சர்வக்கட்சி அரசொன்றை அமைக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதில் இணைவார்கள்.” – எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
