சமரச பேச்சுக்கான களம் தயார்! புடினின் போர் குணம் மாறுமா?

சமரசத்துக்கான பேச்சு மேசை தயாராக உள்ளது என பெலாரஸ் அறிவித்துள்ளது.

ரஷ்யாவும் உக்ரேனும், பெலாரஸ்ஸில் சந்தித்து சமாதான பேச்சுகளை நடத்துவதற்கு நேற்று இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே பெலாரஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இரு தரப்பு (ரஷ்யா-உக்ரேன்) கொடிகளுடன் பேச்சுக்கான மேசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இரு தரப்பு பிரதிநிதிகளும் வந்து இறங்கியதும் பேச்சு ஆரம்பமாகும் என வும் பெலாரஸ் தெரிவித்துள்ளது.

” பேச்சு மூலம் ஒரு தீர்வு கிடைக்குமென நாங்கள் நம்பவில்லை. எனினும் பேச்சுகளில் கலந்து கொள்கிறோம் என உக்ரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles