இலங்கை தற்போது அதளபாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் வைத்த நம்பிக்கையும் தவிடுபொடியாகி விட்டது. இந்த அரசாங்கம் நாட்டிற்கே சாபக்கேடான அரசாங்கமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க பல சதி முயற்சிகளை மேற்கொண்டு நாட்டை கைப்பற்றி இன்று முழுநாட்டு மக்களையும் அதளபாதாளத்தில் தள்ளுகிறது இந்த அரசாங்கம். ஒருபக்கம் தோட்டத்தொழிலாளர்கள் மிகப்பெரிய பொருளாதார சிக்கலை எதிர்க்கொள்கின்றனர். பெற்றோல் விலையை அதிகரித்து முச்சக்கரவண்டி சாரதிகள் வயிற்றில் அடித்து விட்டார்கள்,
உரத்தை பதுக்கி வைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்து விட்டார்கள்,எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதைத்தவிர வாழ்வாதரத்தை இழந்தவர்களுக்கு 5000 நிவாரண தொகை தருவதாக கூறி அதையும் ஏமாற்றி விட்டனர்.
இதைத்தைவிர மதகுருமார்கள், இசைக்கலைஞர்கள், சிறுவியாபாரிகள் என ஒட்டுமொத்த நாட்டுமக்களின் வாழ்க்கையிலும் வயிற்றில் அடித்த இந்த அரசாங்கம் உண்மையில் நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் சாபக்கேடான அரசாங்கம். ” – என்றார்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்
