சித்ராவின் தற்கொலைக்கான காரணம் வெளியானது!

நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே காரணம் என பொலிஸார்  தகவல் வெளியிட்டுள்ளனர்.

சென்னை நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நடிகை சித்ராவின் மரணம் கொலையா தற்கொலையா என விவாதிக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையின் முதல்கட்ட தகவலின்படி சித்ரா தற்கொலைதான் செய்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீறல் அவருடையதுதான் என்றும் அறிவித்தனர்.

இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே காரணம் என பொலிஸ் தகவல் தெரிவித்துள்ளது. கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு சித்ராவிடம் பிரச்னை செய்துள்ளதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles