சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதனை கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
இப்படத்தில் சிரஞ்சீவிக்கு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சாரா அர்ஜுன், அனஸ்வரா ராஜன் உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதியாக ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தமாகி இருக்கிறார். தான் ஒப்பந்தமாகி இருக்கும் பெரிய நடிகர் படம் என்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் ப்ரீத்தி முகுந்தன்.
தமிழ், மலையாளம் என பல்வேறு படங்களில் நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தன், தெலுங்கில் ஒப்பந்தமாகியுள்ள 2-வது படமாக சிரஞ்சீவி படம் அமைந்துள்ளது. முதல் படமாக ’ஹிட்’ படங்களின் இயக்குநர் சைலேஷ் கோலனு இயக்கத்தில் ரோஷன் நடிக்கும் படம் அமைந்துள்ளது.










