சிரேஷ்ட ஊடகர் பாரதியின் இறுதிக்கிரியைகள் நாளை

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் ஊடகப் பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி, சுகவீனம் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், திருநெல்வேலியில் (திண்ணை ஹோட்டலுக்கு முன்பாக) அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இறுதிக்கிரியைகள் மற்றும் அஞ்சலி உரைகள் இடம்பெற்று புகழுடல் தகனக்கிரியைகளுக்காக மதியம் 1 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles