” இரசாயன உரப்பயன்பாட்டுக்கான திடீர் தடையால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கீழ்நாட்டு தேயிலைகள் மஞ்சள் நிறமாகியுள்ளன. இதனால் சிலோன் டீ என்ற நாமத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என சிறு தேயிலை தோட்ட உற்பத்தியாளர்கள் அஞ்சுகின்றனர்.” – என்று பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் சுட்டிக்காட்டினார்.
சேதன உரத்தை உருவாக்குவதற்கான உரிய திட்டங்கள் இன்றி அரசாங்கம் தீடீர் முடிவை எடுத்தது தவறு எனவும் தேரர் குறிப்பிட்டார்.
சேதன பசளையை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து பயிற்சி பெற்ற பின்னர், முடிவுகளை எடுத்திருக்கலாம் எனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, பாராளுமன்ற ஆசனம், துறைமுக நகர விடயம் உள்ளிட்டவை தொடர்பில் ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துகள் வருமாறு,