தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன், ஹட்டன் பொலிஸாரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட கொடுக்க, வாங்கலொன்று தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே இக்கைது இடம்பெற்றுள்ளது.
சிவநேசன் கைது செய்யப்பட்டுள்ளதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
சிவநேசன் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் என்பதுடன் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 7இல் களமிறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் கவனம் திரும்பியுள்ளது.
