சீரற்ற காலநிலையால் அவிசாவளையில் நால்வர் பலி

அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர். 78, 36 மற்றும் 07 வயதான மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்படி சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 11 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles