மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டில் ஏனைய பகுதிகளில் இரவுவேளையில் மழை பதிவாகக்கூடும் எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை, சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், சீரற்ற காலநிலையால் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
