‘சுனாமி’ ஊழித்தாண்டவம் – நாளையுடன் 19 ஆண்டுகள் நிறைவு!

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, நாளையுடன் 19 ஆண்டுகள் கடக்கும் நிலையில் , அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட இந்தியா, இந்தோனேஷியா, மாலைத்தீவு, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளை கண்சிமிட்டும் நேரத்தில் சீரிப்பாய்ந்த சுனாமி அலைகள் தாக்கிச் சென்றது.

இந்த அனர்த்தத்தினால் இலங்கையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பெருமளவு பொருட்சேதமும் ஏற்பட்டது.

சுனாமினால் உலகளவில் 2.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இயற்கை பேரழிவுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், அவை எப்போதும் மறக்க முடியாத காயங்களை ஆழப்பதியச் செய்கின்றன.

2004  டிசம்பர் 26 ஆம் திகதி காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா, தான்சானியா உள்பட நாடுகளில் சுனாமியாக உருவெடுத்தது.

Related Articles

Latest Articles