ஜனாதிபதி பதவி வகித்தவர்கள் மீண்டும் நாடாளுமன்றம் வர தடை!

ஜனாதிபதி பதவியை வகித்தவர்கள் மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு தடை விதிப்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” ஜனாதிபதிமார் மீண்டும் நாடாளுமன்றம் வருவதை, சட்டம் இயற்றி தடை செய்ய வேண்டும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவாரா என தெரியவில்லை. ஜனாதிபதி பதவியை வகித்தவர்கள் மீண்டும் நாடாளுமன்றம் வருவது தவறான முன்னுதாரணமாகும்.

ஜே.ஆர். ஜயவர்தன, சந்திரிக்கா அம்மையார் போன்றோர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர் நாடாளுமன்றம் வரவில்லை.” – எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

அதேவேளை, உணவை வீணடித்தால் தண்டனை விதிப்பதற்கான சட்டமும் கொண்டுவரப்பட வேண்டும். தமக்கு உண்ணக்கூடிய அளவுக்கு அதிகமாக பகிர்ந்து உணவை வீணடிப்பது ஏற்புடையது அல்ல. வெளிநாடுகளில் அவ்வாறு செய்தால் தண்டம் அறவிடப்படும்.” – எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles