டயகம மேற்கு 4ஆம் பிரிவு தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நேற்று செய்தி வெளியாகியிருந்தது.
ஆனால் இக்குடும்பத்தில் 8 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்றியுள்ளது. பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மூவருக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அக்குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இந்த தகவலை சுகாதார அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொற்றுக்குள்ளான 8 பேரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
