தடைகளைத்தாண்டி பாராளுமன்றம் செல்கிறார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டில் பாராளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவரை நியமிப்பதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

ரணில் பெயரை கட்சி தவிசாளர் வஜிர அபேவர்தன முன்மொழிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குலரத்ன வழிமொழிந்தார்.

கட்சியின் இந்த முடிவை அடிப்படையாகக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கட்சி செயலாளர், தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கவுள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் ஐ.தே.க. ஓர் ஆசனத்தைக்கூட கைப்பற்றவில்லை. தேசியப்பட்டில் ஊடாகவே ஓர் ஆசனம் கிடைத்தது. அந்த இடத்துக்குகூட சில மாதங்களாக எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே ரணில் பாராளுமன்றம் செல்லவுள்ளார்.

Related Articles

Latest Articles