தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவைமீறிய 277 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நேற்றிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4மணிவரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 54 ஆயிரத்து 889 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
