தனிவழி செல்வது குறித்து காங்கிரஸ் ஆராய்வு!

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து சேவல் சின்னத்தில் களமிறங்குவது தொடர்பிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பரிசீலித்துவருகின்றது என தெரியவருகின்றது.

கூட்டணி அமைப்பது தொடர்பான முயற்சிகள் தமது தரப்புக்கு சாதகமாக அமையாதபட்சத்தில், தனிவழி செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே சேவல் படை இருப்பதாகவும் அறியமுடிகின்றது.

அவ்வாறு தனித்து செல்வதாக இருந்தால் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் இதொகா வேட்பாளர்களை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்படி மாவட்டங்கள்மூலம் கிடைக்கும் வாக்குகளால் தேசிய பட்டியலுக்குரிய வாய்ப்பும் கிட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்திலேயே களமிறங்கி இருந்தது. நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்ட மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 35 ஆயிரத்து 734 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். (இலங்கையில் தொகுதிவாரி அடிப்படையில் நடைபெற்ற கடைசி பொதுத்தேர்தல் இது)

அதன்பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டுள்ளது.

2024 பொதுத்தேர்தலில் இதொகா தனிவழி செல்லும் பட்சத்தில் 47 வருடங்களுக்கு பிறகு பொதுத்தேர்தலில் சேவல் சின்னம் வருகின்றது.
பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கூட்டப்படவுள்ளது.

அதேவேளை, ‘மாற்றத்திற்கான தலைவர்கள் கூட்டணி’ எனும் பெயரில் புதிய அரசியல் கட்சியொன்று மலையகத்தில் உதயமாகியுள்ளது.
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேச்சையாக இக்கட்சி போட்டியிடவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles