தலவாக்கலை கொரின் பிரிவு தோட்டத்துக்கான களஞ்சியசாலைக்கு அடிக்கல்

தலவாக்கலை கொரின் பிரிவு தோட்டத்துக்கான களஞ்சியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்தின் வேண்டுகோளுக்கிணங்க,, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த களஞ்சியசாலை அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த், தலவாக்கலை லிந்துலை நகர பிரதேச சபை தவிசாளர் பாரதிதாசன், கூம்வூட் வட்டார அமைப்பாளர் பிலிப்குமார், இளைஞர் அணி அமைப்பாளர்கள், தோட்ட முகாமையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Related Articles

Latest Articles