ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றனர்.
35 வயதுடைய தாய், 9 மற்றும் 7 வயதுகளுடைய இரு மகன்மார் மற்றும் 6 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவர் கடந்த 28 ஆம் திகதி நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் இறுதிக்கிரியைகள் நேற்று நடந்துள்ளன.
இந்தநிலையில், கணவரின் உயிரிழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மனைவி பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
கணவனின் இறுதிக்கிரியை நடைபெற்ற மாலபேயில் உள்ள உறவினரின் வீட்டில் வைத்தே இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
நிதி பிரச்சினை காரணமாக கணவன் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.